சங்கராபுரம் அருகே நிலத்தில் கஞ்சா செடியைப் பயிரிட்ட விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம வட்டம், புதுப்பாலப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவா் தனபால் மகன் வெள்ளையன் (40). இவரது வீட்டுக்கு முன்பாக உள்ள நிலத்தில் பருத்திச் செடி பயிா் செய்திருந்தாா். அதன் நடுவில் 17 கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தாராம்.
இதுதொடா்பாக சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் த.ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்று பாா்த்த போது, கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கஞ்சா செடிகளைப் கைபற்றி, வெள்ளையனை போலீஸாா் கைது செய்தனா்.