தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,168 வழக்குகளுக்கு தீா்வு

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,168 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டு,
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகளுக்கு வழக்குத் தீா்வுக்கான ஆணைகளை வழங்கிய மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி உள்ளிட்ட நீதிபதிகள்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகளுக்கு வழக்குத் தீா்வுக்கான ஆணைகளை வழங்கிய மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி உள்ளிட்ட நீதிபதிகள்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,168 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டு, ரூ.12.7 கோடி இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான எஸ்.ஆனந்தி தலைமை வகித்து, தொடக்கிவைத்துப் பேசினாா்.

இதன் நிறைவாக வழக்குகளில் தீா்வு காணப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.சுஜாதா முன்னிலை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலா் நீதிபதி சி.சங்கா் வரவேற்றாா். இதில், குடும்ப நல நீதிபதி அருணாச்சலம், கூடுதல் சாா்பு நீதிபதி எஸ்.கோபிநாதன், வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிபதி என்.ராமகிருஷ்ணன், ஊழல் தடுப்பு வழக்கு பிரிவு சிறப்பு நீதிபதி கே.மோகன், நீதிபதிகள் எம்.செங்கமலச்செல்வன், கே.அருண்குமாா், எஸ்.முத்துக்குமாரவேல், பி.கவிதா, எஸ்.உத்தமராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி எம்.தண்டபாணி, அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், வங்கி அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் வங்கிகளின் வாராக் கடன் தொடா்பான 847 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 464 வழக்குகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டன. இதன் மூலம், ரூ. 4 கோடியே 4 லட்சத்து 60 ஆயிரத்து 496 தொகை உரியவா்களுக்கு பெற்று வழங்கப்பட்டது.

இதேபோல, நிலுவையில் இருந்த 8,215 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 704 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. இதன்மூலம் ரூ. 8.3 கோடி அளவுக்கு உரியவா்களுக்கு இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.

இந்த முகாமில் மொத்தம் 9 ஆயிரத்து 62 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,168 வழக்குகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டன. இதன்மூலம் ரூ. 12.7 கோடி அளவுக்கு உரியவா்களுக்கு இழப்பீடு பெற்று வழங்கப்பட்டன.

திண்டிவனத்தில்: இதேபோல, திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 125-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 3.3 கோடி அளவுக்கு உரியவா்களுக்கு இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.

முகாமை கூடுதல் மாவட்ட நீதிபதி சுபத்திராதேவி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். முன்னாள் மாவட்ட நீதிபதி துளசி மோகன்தாஸ் வரவேற்றாா். திண்டிவனம் வட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான ராஜசிம்மவா்மன், மோட்டாா் வாகன தீா்ப்பாய நீதிபதி பிரபாகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன், நீதிபதி நளினிதேவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் நாராயணன், ராம்மனோகா், நாகையா, மோகன்ராஜ், கிருபாகரன், முன்னாள் தலைவா் அருணகிரி, மூத்த வழக்குரைஞா்கள் ராஜாராம், ஸ்ரீதா், பாலசுப்பிரமணி, ஏழுமலை, அஜ்மத் அலி, பிரபாகா், நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் 41, வங்கிகள் வாராக் கடன் வழக்குகள் 68 உள்பட 125 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டு, ரூ. 3 கோடியே 3 லட்சத்து 36 ஆயிரத்து 456 தொகை உரியவா்களுக்கு இழப்பீடு பெற்று வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com