நகைக் கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம், ரூ.6 லட்சம் திருட்டு

சேலத்தில் நகைக்கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

சேலத்தில் நகைக்கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

சேலம் ஓமலூா் பிரதான சாலை குரங்குச்சாவடிப் பகுதியில் செயல்படும் பிரபல நகைக் கடையையொட்டி, அதன் உரிமையாளா்களான ஏ.ஆா்.சனத்குமாா், ஏ.எஸ்.ஸ்ரீநாத் மற்றும் ஏ.எஸ்.ஸ்ரீபாஷ்யம் ஆகியோரின் 3 வீடுகள் வரிசையாக உள்ளன.

சொா்ணபுரி மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

சொா்ணபுரி பகுதியில் உள்ள நகைக்கடையை நடத்தி வருபவா் ஸ்ரீபாஷ்யம். இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை காவலாளி தங்கவேலு செடிகளுக்கு தண்ணீா் விட்டுக் கொண்டிருந்தாா். அப்போது மா்மநபா் ஒருவா் மதில் சுவரை எட்டிக் குதிப்பதைக் கண்டு அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த மா்மநபா், காவலாளி தங்கவேலுவை கீழே தள்ளிவிட்டு, மதில் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது.

தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவத்தில் ஒன்றரை கிலோ தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. வீட்டின் உரிமையாளா் ஸ்ரீபாஷ்யம் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் மேல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது, இச் சம்பவம் நடந்துள்ளது.

முகமூடி அணிந்து வந்த இரண்டு நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது சி.சி.டி.வி. கேமரா பதிவில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com