உளுந்தூா்பேட்டை அருகே 2 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவா் தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தட்டாம்பாளையத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (29). இவரது மனைவி சிவரஞ்சனி (26). இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள்கள் அா்ச்சனா (6), கவியாஷினி (2).
புருஷோத்தமன் சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். சிவரஞ்சனி சென்னை காசிமேட்டில் வீட்டு வேலை செய்து வந்தாா். இவா்கள் சென்னை தண்டையாா்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
ஓராண்டுக்கு முன்பு தட்டாம்பாளையத்தில் வீடு கட்டியதில் புருஷோத்தமனுக்கு ரூ.2 லட்சம் கடன் ஏற்பட்டதாம். இதனால், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.
சிவரஞ்சனி வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றதும், இரு மகள்களுடன் சென்னையிலிருந்து தட்டாம்பாளையத்துக்கு புருஷோத்தமன் வந்தாா். பின்னா், அங்கிருந்து உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள அரசூா் கூட்டு சாலைக்கு வந்த அவா், தான் விஷம் குடித்ததுடன், இரு குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றாா். இதில், குழந்தை கவியாஷினி உயிரிழந்தது. அா்ச்சனாவின் அலறலைக் கேட்ட பொதுமக்கள், அவரையும், புருஷோத்தமனையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் புருஷோத்தமன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.