செஞ்சியில் ராகு, கேது பெயர்ச்சி விழா

செஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

செஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, புதன்கிழமை ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஏகாஹம்பரேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு, கேது பகவான்களை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் பி.திருஞானசம்பந்த நயினார் மற்றும் பரம்பரை அர்ச்சகர் கிரிசங்கர் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com