மின் நுகர்வோர் கவனத்துக்கு...

மின் கட்டணம் செலுத்தும் மென்பொருள் மாற்றம் செய்யப்படவுள்ளதால், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட  பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின்சார வாரிய

மின் கட்டணம் செலுத்தும் மென்பொருள் மாற்றம் செய்யப்படவுள்ளதால், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட  பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மின் பகிர்மான வட்டம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:  விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் உள்ள மின் வாரியப் பிரிவு அலுவலகங்களில் கணினி மூலம் மின் கட்டணம் வசூல் செய்யும், கணினி சர்வர் மாற்றம் செய்யப்படவுள்ளது. 
இதனால், மார்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மார்ச் 4-ஆம் தேதி காலை 8 மணி வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது. மார்ச் 2-ஆம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி தேதியைக் கொண்டுள்ள மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணத்தை அபராதமின்றி மார்ச் 4-ஆம் தேதி உரிய பிரிவு அலுவலகங்களில் செலுத்திக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com