இன்று அரசு உதவி வழக்குரைஞர் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக விழுப்புரத்தில் அரசு உதவி வழக்குரைஞர் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக விழுப்புரத்தில் அரசு உதவி வழக்குரைஞர் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு உதவி வழக்குரைஞர் பதவிக்கான போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. 
விழுப்புரத்தில், காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தத் தேர்வை 379 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ளனர். 
தேர்வு மையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com