மது போதையில் தவறி விழுந்தவர் சாவு

செஞ்சியில் மதுபோதையில் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

செஞ்சியில் மதுபோதையில் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
செஞ்சி சிறுகடம்பூர் பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் மோசஸ் (44). இவர் கடந்த 9 ஆம் தேதி இரவு மதுபோதையில் சிங்கவரம் சாலையில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தபோது, தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். 
செஞ்சி அரசு மருத்துவமனையின் முதலுதவிக்குப் பிறகு இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார். செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com