விவேகானந்தர் ஜெயந்தி விழாவையொட்டி, திருக்கோவிலூர் அருகே அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருக்கோவிலூரை அடுத்த தபோவனம் ஸ்ரீஞானானந்த நிகேதன் வளாகத்தில் உள்ள விவேகானந்தர் திருவுருவச் சிலைக்கு நிகேதன் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் சுவாமி ஸ்ரீநித்யானந்தகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சுவாமி அம்ருதேஸ்வரானந்தா, நிகேதன் மேலாளர் சிவக்குமார், தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார.உதியன், அருட்தந்தை அருள்நாதன் தங்கராசு உள்ளிட்டோர் விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.