மாட்டுப் பொங்கலையொட்டி, நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில், மாட்டுப் பொங்கலையொட்டி, நந்திகேஸ்வரருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மலர்களால் அலங்கரித்து ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பல்வேறு காய்கறிகளால் நந்திகேஸ்வரருக்கு மாலை அணிவித்து, பழ வகைகள் மற்றும் இனிப்புகள், காரம் உள்ளிட்டவைகள் வைத்து வழிபட்டனர்.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.