திருக்கோவிலூரில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 60 பாக்கெட் போதைப் பாக்குகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் குணபாலன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை பிற்பகல் அப்பகுதியில் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, லாலா தோப்பு தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போலீஸார் சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கடையில் இருந்த 60 பாக்கெட் போதை பாக்குகளை போலீஸார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் பாலமுருகனை(48) கைது செய்தனர்.