விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், பெண் காவலரிடம் தகராறு செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் சசிக்குமார்(40). இவர், திங்கள்கிழமை காலை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, அங்கு அவரச சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவரிடம் தகராறு செய்தாராம். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பாதிக்கப்பட்டது.
உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மேற்கு காவல் நிலைய பெண் காவலர் சத்யபிரியா(33) தகராறு குறித்து விசாரித்தார். இதற்கு, சசிக்குமார், காவலர் சத்யபிரியாவிடமும் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்து, திட்டினாராம். தகவல் அறிந்து விழுப்புரம் மேற்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து சத்யபிரியா அளித்த புகாரின்பேரில் போலீஸார் சசிக்குமாரை கைது செய்தனர்.