உலக  மக்கள்தொகை தின விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார மருத்துவ அலுவலர் பி.பங்கஜம் தலைமை வகித்தார். 
மருத்துவர்கள் என்.இராமகிருஷ்ணன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வயாளர்  கு.மகாலிங்கம் வரவேற்றார்.
சமுதாய நல செவிலியர் ஜி.வள்ளி, கிராம சுகாதாரச் செவிலியர் பி.மஞ்சுளா, ஆர்.கே.எஸ். கல்லூரி பயிற்சி மாணவிகள் ஆகியோர் மருத்துவத் திட்டங்கள், தாய் - சேய் நலத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
கூட்டத்தில் பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், சுகாதாரச் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வட்டார புள்ளியியல் உதவியாளர் ஜெ.சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com