செஞ்சி வட்டம், மேல்சித்தாமூர் பகவான் ஸ்ரீபார்சுவநாதர் ஜினாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதமிழ்நாடு தமிழ் ஜெயின் சேவா சங்கம் மற்றும் ஜெயின் சோஷியல் பெடரேஷன் இணைந்து 27-ஆம் ஆண்டாக நடத்திய இந்த விழா, திருவறக்கொடி ஏற்றத்தோடு, இறை வணக்கத்துடன் தொடங்கியது. மேல்சித்தாமூர் இலட்சுமி சேனபட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் மற்றும் இளைய பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை இ.ஜம்புகுமார், டாக்டர் செல்வகுமார், பவன்குமார், தரம்சந்த்ஜிகுலேச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசின் சிறுபான்மை இன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜித்பிரசாத் மற்றும் கௌதம் குமார் ஆகியோரைப் பாராட்டி, ப.ஜீவகன், இரா.தங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
சமண சமயத்துக்கு தொண்டு செய்யும் சென்னை ஜெயபால்சாஸ்திரி, திண்டிவனம் ஸ்ரேணிகராஜன், அப்பாண்டை ராஜன், மறைமலை நகர் ராஜசேகரன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில், சமண சமயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.