மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலையின் தலைவர் எஸ்.எஸ்.அரசு தலைமை வகித்தார். விழுப்புரம் அரசு பொது மருத்துவர் சங்கர நாராயணன், சுகாதார துணை இயக்குநர் ஜெமினி, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன் வரவேற்றார்.
ஆலையின் மேலாண்மை இயக்குநர் அனுசுயாதேவி முகாமைத் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, சிறுநீரகம் மற்றும் இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், ஆலைத் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பயனடைந்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பாலசேகர், கணக்கு அலுவலர் சம்பந்தன், துணை ரசாயனர் சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அலுவலக மேலாளர் திருவேங்கடம் நன்றி கூறினார்.