தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை  வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை  வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடை
பெற்றது.
கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருஞானம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தலை முன்னிட்டு,  செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு நடைமுறைகள், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளை கையாளுதல் குறித்தும்,  தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர், தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வேல்முருகன் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com