திண்டிவனம்: திண்டிவனம் நகர அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறு வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார்.
எலக்ட்ரானிக் சங்கத் தலைவர் சேகர் காய்கறி சங்கத் தலைவர் இளங்கோபடையாட்சி, மளிகை சங்கத் தலைவர் ஜான்பாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்
தனர்.
நகரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடம், ஓ.பி.ஆர். பூங்கா, இந்திரா காந்தி பேருந்து நிலையம், நேரு வீதியில் பழைய நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் கடைகள் அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.