குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்: திமுக வேட்பாளர் கெளதமசிகாமணி உறுதி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, முன்னுரிமை அளித்து செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, முன்னுரிமை அளித்து செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளர் பொன்.கெளதமசிகாமணி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவியிடம் திமுக வேட்பாளர் பொன். கெளதமசிகாமணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் பிரசாரம் செய்யவுள்ளனர். கூட்டணிக் கட்சியினர் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். மக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இந்தத் தொகுதிக்குள்பட்ட கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள கடுக்காய் தொழில்சாலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர  முயற்சிப்பேன். சாலை வசதி இல்லாத பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com