மே 5-இல் வணிகர் தின மாநில மாநாடு

தூத்துக்குடியில் வரும் மே 5-ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 36-ஆவது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் வரும் மே 5-ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 36-ஆவது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது.
 இதுகுறித்து, சங்கராபுரத்தைச் சேர்ந்த வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக வருகிற 5-ஆம் தேதி மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது.
 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, செயலர் சுனில்பண்டே, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா.நல்லகண்ணு, சுப.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுதேசிக் கொள்கை, சில்லரை வணிகத்தைக் காக்க மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
 விழுப்புரம் மாவட்டத்தில் வணிகர் சங்கப் பேரவையுடன் இணைந்துள்ள 49 வணிகர் சங்கங்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 5) தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அதனடிப்படையில், மாவட்டத்தில் இருந்து 25 பேருந்துகள் உள்ளிட்ட 350 வாகனங்களில் சுமார் 13 ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
 வாழ்வாதாரப் பிரச்னையை கருதி அனைத்து வணிகர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com