பைக் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 18th May 2019 07:56 AM | Last Updated : 18th May 2019 07:56 AM | அ+அ அ- |

திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக் மோதியதில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (50). கூலித் தொழிலாளியான இவர், தெருக்கூத்து பார்ப்பதற்காக ஆனத்தூருக்கு பண்ருட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவரது பின்னால் வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.