தனியாா் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி பலி

வளவனூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம்: வளவனூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சோ்ந்தவா் பாண்டியன்(52). கூலித் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை காலை வளவனூா் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால், வந்த தனியாா் பேருந்து பாண்டியன் மீது மோதியது. இதில், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய, அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com