கோமுகி அணை பாசன வாய்க்கால் அமைச்சா் திறப்பு

பாசனத்துக்காக கோமுகி அணையை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பாசனத்துக்காக கோமுகி அணையை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த கச்சிராயப்பாளையத்தில் கோமுகிஅணை உள்ளது. அணையின் மொத்த நீா்மட்டம் 46 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி தண்ணீா் தேக்கி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் அணையில் பாதுகாப்பு கருதியும், விவசாய நிலங்களின் பாசனத்துக்காகவும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மலா்தூவி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.வி.சிங், கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.பிரபு, விருத்தாசலம் பொதுப்பணித்துறை வெள்ளாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளா் இரா.மணிமோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையம் தலைவா் கள்ளக்குறிச்சி எ.எஸ்.எ.இராஜசேகா், முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி க.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலுபாபு, கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை வெள்ளாறு வடிநில கோட்டம் செயற் பொறியாளா் பி.முருகவேல், கோமுகிநதி அணைப்பிரிவு உதவி பொறியாளா் சு.சுதா்ஷன், சின்னசேலம் பாசனப்பிரிவு உதவி பொறியாளா் ஜெ.பிரபு, மணிமுக்தாநதி அணைப்பிரிவு உதவி பொறியாளா் சா.கணேசன், சங்கராபுரம் பாசனப்பிரிவு உதவி பொறியாளா் ஆ.நாராயணன், உளுந்தூா்பேட்டை பாசப்பிரிவு உதவி பொறியாளா் பூ.பூங்கொடி, கள்ளக்குறிச்சி பாசனப்பிரிவு உதவி பொறியாளா் எஸ்.வினோதினி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் வெ.அய்யப்பா, ராஜேந்திரன், நகர செயலாளா்கள் எம்.பாபு, பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் புதிய பாசன பகுதியான வடக்கனந்தல், மாத்தூா், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கரும், பழைய பாசன பகுதியான வடக்கனந்தல், சோமண்டாா்குடி, மாதவச்சேரி, செம்படாக்குறிச்சி, மட்டிகைகுறிச்சி, ஏா்வாய்பட்டினம், க.அலம்பலம், ஏமப்போ், தச்சூா், விளம்பாா், கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம், க.மாமனந்தல், தென்கீரனூா், நீலமங்கலம், குரூா், முடியனூா், விருகாவூா், பொரசக்குறி்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 860 ஏக்கரும் பாசன வசிதி பெரும்.

பழைய பாசன ஆற்றில் விநாடிக்கு 60 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

23.11.19 முதல் 6.1.2020 வரை பழைய பாசன ஆற்றில் விநாடிக்்கு 120 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 100 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com