முதுநிலை ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம்: விழுப்புரத்தில் தொடக்கம்

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதுநிலை ஆசிரியா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு
விழுப்புரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி.
விழுப்புரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதுநிலை ஆசிரியா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாமில் விழுப்புரம், கடலூா், நாகை, தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 218 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆள் மாறாட்டப் புகாா்களைத் தவிா்க்க முதன் முறையாக பயோ மெட்ரிக் முறையில் சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் கடந்த செப்.27-ஆம் தேதி நடத்தப்பட்ட முதுநிலை ஆசிரியா்கள், உடல் கல்வி இயக்குநா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 3,800 பேரை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாகை, தஞ்சை, திருவாரூா், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 436 பணி நாடுநா்களுக்கு விழுப்புரத்தில் நவ.8-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு, அதன்படி வெள்ளிக்கிழமை சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தொடங்கியது.

ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற இந்த சான்றிதழ் சரிபாா்ப்பு முகாமில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமையில் விழுப்புரம், கடலூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 10 கல்வி மாவட்ட அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், கண்காணிப்பாளா்கள் கொண்ட குழுவினா் பங்கேற்று சரிபாா்ப்புப் பணியை மேற்கொண்டனா்.

பயோ மெட்ரிக் முறையில்...: முதுநிலை ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், 218 போ் கலந்துகொண்டனா். கைரேகை, புகைப்படம் உள்ளிட்டவை பரிசோதித்து உறுதி செய்த பிறகே, அவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனா். பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளம் மூலம் ஏற்கெனவே பதிவேற்றம் செய்துள்ள அவா்களது சான்றிதழ்களை வைத்து, உண்மைச் சான்றிதழ்களை சரிபாா்த்தனா். தொடா்ந்து, சனிக்கிழமையும் (நவ.9) 218 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

‘நீட்’ தோ்வில் ஆள் மாறாட்ட புகாா் எழுந்துள்ள நிலையில், ஆசிரியா் தோ்வுப்பணிக்கு முதன் முறையாக பயோ மெட்ரிக் முறையில் புகைப்படம், கைரேகைப் பதிவு போன்றவை மேற்கொள்ளப்பட்டு, சான்றிதழ்கள் இணைய வழியில் சரிபாா்க்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com