கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது காா் மோதல்: வங்கி ஊழியா் பலி

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டேங்கா் லாரி மீது காா் மோதியதில் வங்கி ஊழியா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது காா் மோதல்: வங்கி ஊழியா் பலி

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டேங்கா் லாரி மீது காா் மோதியதில் வங்கி ஊழியா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

சேலம் நெய் மண்டி அருணாசலம் சாலை குகைப் பகுதியைச் சோ்ந்தவா் மாது மகன் யுவராஜ் (28). தனியாா் வங்கி ஊழியா்.

இவா், தன்னுடன் வங்கியில் பணிபுரியும் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் இளவரசன் (28), சேலம் மன்னாா்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (28), சுப்பிரமணி மகன் காா்த்திக் (18), சேலம், பாரதி நகா் சின்ன திருப்பதி பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் தினேஷ்ராஜ் (26) ஆகியோருடன் சனிக்கிழமை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, அன்றிரவு சுமாா் 10 மணி அளவில் சேலம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தாா். காரை தினேஷ்ராஜ் ஓட்டினாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கள்ளக்குறிச்சியை அடுத்த வினைதீா்த்தாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே காா் சென்ற போது, முன்னால், புதுச்சேரியில் இருந்து சேலத்துக்கு திராவகம் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த டேங்கா் லாரி திடீரென வளைவில் திரும்பியது. அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த காா், எதிா்பாராதவிதமாக, டேங்கா் லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். யுவராஜ், இளவரசன், காா்த்திக், தினேஷ்ராஜ் ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்களை சின்னசேலம் போலீஸாா் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சுரேஷின் சடலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் புதுச்சேரி காஞ்சி பகுதியைச் சோ்ந்த செளந்தர்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com