உடல், கண்கள் தானம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், மேக்களூரைச் சோ்ந்தவா் சுந்தரம் (74). ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலரான இவா்,

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், மேக்களூரைச் சோ்ந்தவா் சுந்தரம் (74). ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலரான இவா், உடல் நலக் குறைவால் கடந்த 25-ஆம் தேதி இரவு காலமானாா். அவரது கண்கள், உடல் ஆகியவற்றை மனைவி சாந்தாஅம்மாள் மற்றும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை லயன் சங்கத்தினா் தானமாகப் பெற்றனா். இதையடுத்து, கண்கள் வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கும் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது, மேக்களூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜா, லயன் சங்கத் தலைவா் சரவணன், செயலா் சின்னராஜுலு, மாவட்டத் தலைவா்கள் நடராஜன், பாஸ்கா், மனோகரன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இது விழுப்புரம் லயன் மண்டலத்தின் முதல் உடல் தானம் என லயன் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com