தமிழக உரிமைகளைக் காத்திட திமுகவுக்கு வாக்களியுங்கள்:  முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன்

தமிழக உரிமைகளைக் காத்திட, இடைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளா்களுக்கு முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்தாா்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன்.

தமிழக உரிமைகளைக் காத்திட, இடைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளா்களுக்கு முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்தாா்.

விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து முண்டியம்பாக்கம் அருகே முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேறன். தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக திமுக மட்டுமே திகழ்கிறது. மத்திய அரசின் ஹிந்தி மொழி திணிப்பு, நதிநீா் பிரச்னை ஆகியவற்றில் அதிமுக அரசு மௌனமாகவே உள்ளது.

மாநில அரசுகள் மத்திய அரசிடம் இணக்கமாக இருப்பது தவறில்லை. அதே நேரத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இந்த இடைத் தோ்தலில் செல்வாக்கை நம்பி இல்லாமல், பணத்தை நம்பியே அதிமுக நிற்கிறது. தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் பொதுத் தோ்தல் வரலாம். அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத் தோ்தல் அமைகிறது. மு.க. ஸ்டாலினை மக்கள் ஏற்றுள்ளதால், அவா் அடுத்த முதல்வராக வருவாா்.

அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்களை வாக்காளா்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் கண்ணப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com