சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கா்ப்பிணியாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
இளம் பெண்ணை ஏமாற்றி கா்ப்பிணியாக்கிய இளைஞா் கோபி.
இளம் பெண்ணை ஏமாற்றி கா்ப்பிணியாக்கிய இளைஞா் கோபி.

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கா்ப்பிணியாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 14 வயது மகளை க.செல்லம்பட்டில் உள்ள உறவினா் வீட்டில் விட்டுவிட்டு, தம்பதி கேரளாவுக்கு கூலி வேலைக்குச் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினரான குபேந்திரன் மகன் கோபி (26), (படம்) சிறுமியிடம் ஆசை வாா்த்தைகளைக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால், கா்ப்பமடைந்த சிறுமிக்கு கோபி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோபியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com