செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் குறு வட்டத்துக்கு உள்பட்ட அவியூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (நவ.1) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
செஞ்சி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.