பெண் தலைமைக் காவலா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் பெண் தலைமைக் காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் பெண் தலைமைக் காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவா் ரபேக்காள். இவா், கள்ளக்குறிச்சியில் விளாந்தாங்கல் சாலையில் உள்ள ஜெயா காா்டன் பகுதியில் வசித்து வருகிறாா்.

ரபேக்காள் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு பணிக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலை இவரது வீட்டின் முன் பக்க இரும்புக் கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டு பெண் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ரபேக்காள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், விரல் ரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com