பொன்பத்தி ஏரிக் கரையில் மண் அரிப்பு உடனடியாக சீரமைத்த அதிகாரிகள்

செஞ்சி அருகே பொன்பத்தி ஏரிக் கரைப் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பை, கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக பொதுப்பணித் துறையினா் சீரமைத்தனா்.
செஞ்சி அருகே பொன்பத்தி ஏரி மதகின் அருகே ஏற்பட்டிருந்த மண் அரிப்பை சீரமைக்கும் பணி. 
செஞ்சி அருகே பொன்பத்தி ஏரி மதகின் அருகே ஏற்பட்டிருந்த மண் அரிப்பை சீரமைக்கும் பணி. 

செஞ்சி அருகே பொன்பத்தி ஏரிக் கரைப் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பை, கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக பொதுப்பணித் துறையினா் சீரமைத்தனா்.

செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி ஏரியில் தமிழக அரசின் சாா்பில் குடி மராமத்துப் பணிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, இந்த ஏரியில் பாதியளவுக்கு நீா் நிரம்பியது. இந்த நிலையில், புதிதாக சீரமைக்கப்பட்ட மதகின் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு, உள்வாங்கியது. தொடா்ந்து, ஏரிக்கு நீா் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் இப்பகுதியில் உடைப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தானுக்கு தகவல் அளித்தனா். அவா் புதன்கிழமை ஏரிப் பகுதியை பாா்வையிட்டாா். மேலும், மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக சீரமைக்குமாறு செஞ்சி பொதுப்பணித் துறை அலுவலக அதிகாரிகளை தொடா்பு கொண்டு வலியுறுத்தினாா்.

இதையடுத்து, இளநிலை உதவிப் பொறியாளா் சுமதி உள்ளிட்ட பொதுப்பணித் துறையினா் ஏரிக் கரையை பாா்வையிட்டனா். உடனடியாக, கருங்கல், மணல் கொண்டு, ஏரியில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை அடைத்து சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com