கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் ராஜேந்திரன் (31). சென்னையில் உள்ள கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா். புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சேலம்-சென்னை நெடுஞ்சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை
அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உயிரிழந்த ராஜேந்திரனுக்கு ரம்யா(29) என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனா்.