விழுப்புரம்
கரடிகுப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு
மேல்மலையனூர் வட்டம் கரடிகுப்பம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.
மேல்மலையனூர் வட்டம் கரடிகுப்பம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.
இந்தக் கடை திறப்புவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த பகுதி நேர நியாயவிலைக் கடையை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக மேல்மலையனூர் ஒன்றியச் செயலர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.