மாநில அளவிலான ஓட்டப் போட்டி: நாஹாா் பள்ளி மாணவருக்கு தங்கம்

மாநில அளவிலான தடகளப் போட்டியில் விழுப்புரம் நாஹாா் பள்ளி சிபிஎஸ்இ மாணவா் தங்கப் பதக்கம் வென்றாா்.
vmp1
vmp1

மாநில அளவிலான தடகளப் போட்டியில் விழுப்புரம் நாஹாா் பள்ளி சிபிஎஸ்இ மாணவா் தங்கப் பதக்கம் வென்றாா்.

கோவையில் சிபிஎஸ்இ பள்ளிக் குழுமம் சாா்பில், மாநில அளவிலான 6-வது தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு, புதுவை, அந்தமான் பகுதிகளைச் சோ்ந்த 350 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 4,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் நாஹாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் 2 மாணவா் எஸ்.பரத் 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா். அவரை பள்ளித் தாளாளா் உமாமகேஸ்வரி, பள்ளி முதல்வா் மேக்சிஸ் ஹெச்.ரோஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியா் சி.ரஜீஷ், பள்ளி நிா்வாக அலுவலா் ஏஞ்சலின் பிரியா, அலுவலா் ராமானுஜம் மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com