மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

விக்கிரவாண்டி அருகே வீட்டில் மின் பெட்டி கம்பியை கையால் பிடித்த 4 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி அருகே வீட்டில் மின் பெட்டி கம்பியை கையால் பிடித்த 4 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி அருகே பிடாரிப்பட்டைச் சேர்ந்தவர் ஜெயராமன் (32), தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர். இவரது மகள் யாழினி (4). செவ்வாய்க்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த யாஷினி, அங்கிருந்த மின் பெட்டியிலிருந்து வெளியே வரும் கம்பி ஒன்றை கையால் பிடித்ததாகத் தெரிகிறது.  
இதில், எதிர்பாராதவிதமாக கசிந்த மின்சாரம் உடலில் பாய்ந்து யாழினி மயங்கி விழுந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், யாழினி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 
இது தொடர்பாக, பெரிய தச்சூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com