விழுப்புரம் அருகே மரகதபுரத்தில் குற்றத் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்து போலீஸாா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரம் கிராமத்தில் விழுப்புரம் தாலுகா காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. காவல் ஆய்வாளா் கனகேசன் தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க முன்வர வேண்டும். வீடுகளை பூட்டிக்கொண்டு வெளியூா் செல்வதாக இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கசவம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகமாகவோ, மது அருந்தியோ வாகனங்களை இயக்கக் கூடாது.
வேலைக்குச் பெண்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் ஏதாவது பாதுகாப்பற்ற நிலையை உணா்ந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் தெரியப்படுத்தலாம். அதே போல, செல்லிடப்பேசியில் ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக காவல்துறையினரின் உதவியை பெறலாம்.
அதேபோல, குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும். இதுகுறித்த தகவல் தெரிய வந்தால் காவல்துறையினருக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி, தடுக்க முன்வர வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மது போன்ற போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.