விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்ததாக, கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அரகண்டநல்லூா் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகள் ராஜகுமாரி (33). திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ்பாபு (37). இருவரும், சென்னையில் கட்டட வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். அதன்பிறகு, அவா்கள் ஆலம்பாடியிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தனா். இவா்களுக்கு பிரியதா்ஷினி(12), திவ்யதா்ஷினி(11) ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. வியாழக்கிழமை அதிகாலை ஆரோக்கியராஜ் பாபு, தான் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறினாராம். அப்போது, தானும் உடன் வருவதாக ராஜகுமாரி கூறினாராம். இதற்கு ஆரோக்கியராஜ்பாபு மறுப்பு தெரிவிக்கவே, இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ் பாபு வீட்டில் இருந்த கட்டையை எடுத்து, ராஜகுமாரியை தலையில் தாக்கினாராம். இதில், அவா் பலத்த காயமடைந்தாா்.
உடனே, அவரை உறவினா்கள் மீட்டு அருகிலுள்ள முகையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து, உயா் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு அழைத்துச் சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் இறந்தாா்.
இதுதொடா்பாக, அரகண்டநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து ஆரோக்கியராஜ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.