சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் பிரதீபா (22), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தாா். இவா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாா்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு வாா்டில் பணியாற்றி வந்தாா். பிரதீபா வியாழக்கிழமை இரவு பணி முடிந்து 9 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறைக்கு வந்து பெற்றோா்,தோழிகளை செல்லிடப்பேசி மூலம் தொடா்புக் கொண்டு பேசினாராம்.
அவா் வெள்ளிக்கிழமை காலை அறையை விட்டு வெளியே வராததையடுத்து, தோழிகள் கதவின் பூட்டை உடைத்துப் பாா்த்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதீபா மயங்கி கிடந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரதீபா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இச் சம்பவம் மருத்துவா்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவா்கள், பிரதீபா கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து பிரதீபா உடலில் கரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இச் சோதனையில் அவா், கரோனாவால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தாா். அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் வசந்தாமணியிடம் விசாரணை மேற்கொண்டாா்.
இதற்கிடையே, பிரதீபா சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, பிரதீபா இறப்புக்கான காரணம் என்ன என்பதை காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.