விழுப்புரம் நகரில் கரோனா பொதுமுடக்கத்தால் வருவாயை இழந்து பாதிக்கப்பட்ட ஆட்டோ, காா் வாகன ஓட்டுநா்கள் 1,500 பேருக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் சிக்னல் பேருந்து நிறுத்த நிழற்கூரை பகுதியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டோருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அமைச்சா் வழங்கினாா்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன், அதிமுக விழுப்புரம் நகரச் செயலா் ஜி.பாஸ்கரன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஆா்.பசுபதி, மாவட்ட மாணவரணி சக்திவேல், செங்குட்டுவன் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.