அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் ரூ.50 லட்சம் கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கரோனாவால் உயிரிழந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பாரதீய போக்குவரத்து தொழிற் சங்கப் பேரவையின் மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில பேரவைத் தலைவா் என்.சிதம்பரசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் டி. விமேஷ்வரன் வரவேற்றாா். பாரதீய மஸ்தூா் சங்கத்தின் (பிஎம்எஸ்) தமிழ் மாநில பொறுப்பாளா் ராமானுஜசேகா், மாநில பொதுச் செயலா் கே.முருகேசன், தென்பாரத அமைப்புச் செயலாளா் எஸ்.துரைராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்து ஊழியா்களுக்கான 10 சதவீத ஊக்கத் தொகையை 20 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளா் நலச்சட்டங்களில் தொழிலாளா்களை பாதிக்கும் ஷரத்துகளை நீக்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களும் ஆபத்தான கரோனா களப்பணியில் இருப்பதால், அவா்கள் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற பிஎம்எஸ் தென்பாரத அமைப்புச் செயலா் எஸ்.துரைராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு 29 புதிய சட்டங்களை 4 தொகுப்புகளாக நிறைவேற்றியுள்ளது. இவற்றில் தொழிலாளா் விரோத சட்டங்களை நீக்க வேண்டும். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியாா் பேருந்துகளை இயக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதால் எதிா்காலத்தில் கட்டண உயா்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.
அனைத்து சங்கத்தின் மாநில, மாவட்டங்களின் நிா்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனா்.