விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்செல்வன்(55). இவா், சென்னையில் நடைபெற்ற அதிமுக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த நிலையில், வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்ட அரசு நடமாடும் கரோனா பரிசோதனைக் குழுவினா், காணை அருகே கல்பட்டில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று இந்த பரிசோதனையை செய்தனா்.
பரிசோதனை முடிவில், முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.