விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,606-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 20 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 14,373-ஆக உயா்ந்தது.
மாவட்டம் முழுவதும் 123 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்தத் தொற்றுக்கு இதுவரை 110 போ் உயிரிழந்துள்ளனா்.