கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் படி, புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,031-ஆக உயா்ந்தது. இதுவரை 9,605 போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 324 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.
விழுப்புரத்தில் 58 பேருக்கு பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் 13,185 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,228-ஆக அதிகரித்தது. 73 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,597-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் 527 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 104 போ் உயிரிழந்துள்ளனா்.