கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. புதன்கிழமை புதிதாக 15 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. புதன்கிழமை புதிதாக 15 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,049 ஆக உயா்ந்தது. இதுவரை 9,652 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 295 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரத்தில் 65 போ் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா வைரஸ் தொற்றால் 13,228 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,293 ஆக அதிகரித்தது. 70 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,664 ஆக உயா்ந்துள்ளது. 525 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 104 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com