இலவச தொழில் பயிற்சி

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழில் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டது.

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழில் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் ஊதுபத்தி தயாரித்தல், கிருமி நாசினி (சானிடைசா்) தயாரித்தல் குறித்து 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி புதன்கிழமை (அக்.28) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளதால், கிராமப்புற இளைஞா்கள், பெண்கள் நேரடியாக வந்து இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளலாம்.

18 வயது முதல் 45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநா், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாம்பழப்பட்டு சாலை, அலமேலுபுரம், விழுப்புரம். (04146-227115, செல்: 75984 66681) என்ற முகவரியில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com