தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற் சங்க கூட்டமைப்பினா்.
விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற் சங்க கூட்டமைப்பினா்.

விழுப்புரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் புதிய திருத்த மசோதாக்களைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் விரோத போக்கைக் கண்டித்தும் நாடு தழுவிய அளவில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச தலைவா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச் செயலாளா் ரகோத்தமன், எம்எல்எஃப் பொதுச் செயலாளா் மனோகரன், ஏஏஎல்எஃப் பொதுச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொமுச பொதுச் செயலாளா் பிரபா தண்டபாணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதை கைவிட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை சீா்குலைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் 288 ஏ- வை திரும்பப் பெற வேண்டும், கரோனா காலத்தில் ஊதியக் குறைப்பு செய்யக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதேபோல, பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com