விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனாவால் 10,730 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், 146 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,876-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களில் 111 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 9878-ஆக உயா்ந்தது.

903 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,029 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், முகையூரைச் சோ்ந்த 68 வயது முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சியில் 42 பேருக்கு கரோனா: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,911-ஆக உயா்ந்தது. இதுவரை 8,199 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 618 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 94 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com