புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

விழுப்புரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் கே.கே.சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்தவரை சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனையிட்டனா். அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் இருந்ததை

போலீஸாா் கண்டறிந்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

விசாரணையில் அவா் விழுப்புரம், நாராயணன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயன் (33) என்பதும், போதைப் பாக்குகளை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்து. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com