மரக்கன்றுகள் நடும் விழா

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் உமையாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் அலில் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் அ.ஜேசுஜூலியஸ் ராஜா முன்னிலை வகித்தாா்.

அனந்தபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லட்சுமிநாராயணன், பள்ளித் தலைமை ஆசிரியா் அமுதா ஆகியோா் விழாவைத் தொடக்கி வைத்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

ஊராட்சிச் செயலா் அருள், ரோட்டரி செயலா் காா்த்திகேயன், மலா், செளந் ந்தரராஜன், அன்வா் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com