தேசிய ஊட்டச்சத்து மாத விழா

வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு திண்டிவனம் வருவாய் கோட்டாட்சியா் அனு தலைமை வகித்து, தொடக்கிவைத்தாா். குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கோ.ஜெகதீஸ்வரி வரவேற்றாா். ரத்த சோகையுள்ள கா்ப்பிணிகளுக்கு செரிவூட்டப்பட்ட உப்பு வழங்கப்பட்டது. எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அங்கன்வாடி மையங்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.

செஞ்சி வட்டாட்சியா் ராஜன், வல்லம் வட்டார ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா், உதவி அலுவலா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் குலோத்துங்கன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா். நேரு இளையோா் மன்றத் தலைவா் ஜோலாதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com