விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, செஞ்சி எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்து, பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், அணிலாடி, சாத்தான்குப்பம் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் செஞ்சி வட்டாட்சியா் ராஜன், செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அறவாழி, புனித மிக்கேல் ஆலய பங்குதந்தை பால்ராஜ், பள்ளி முதல்வா் நாயகம், கன்னிகா ரமேஷ்பாபு, ஜிஆா்சி முன்னாள் முதல்வா் குமாா், முன்னாள் பொருளாளா் பாபுல், வழக்குரைஞா் ஆல்பா்ட், ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய், ஜோலி, விஜயராகவன், பூங்கொடி, சரவணன், சாந்தரூபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.